பருவத்தே பயிர்
செய்ய சொல்லும்
பி .டி விதை விற்கும்
மரண வியாபாரி…
கடவுளை நம்பினார்
கைவிடபடார்
என எண்ணிய கோயிலுக்குள்
ஆண்டவன் விக்ரகம்
பூட்டிய அறைக்குள்…
வஞ்சகம் பேசேல்
எனும்
நயமாக பேசும் நாக்கு
வியாபாரிகள்…
ஊரார்
உடைமையில் உயிர்
வளர்க்கும்
அதிகார ஒட்டுண்ணிகள்…
ஞயம்பட உரைக்க
கூறும்
110 விதியை நியாயம்
இல்லாமல்
அறுவடை செய்யும்
ஆட்சியாளர்கள்…
காசேதான் கடவுளடா-சில
மருத்துவனுக்கு
மனித உயிரே காசுதானடா..
.
Time to lead வாசகத்தை
கூட
பிரசுரிக்க வலிமை
இல்லாத நாளைய தமிழகம்..
3 லட்சம் தமிழன்
மூச்சடைத்து
முள்ளிவாய்க்காலில்
முகாரி ஒலித்தபோது
உணர்வில்லாதவன்
3 நாள் பிணை தாமதத்துக்கு
முடி இழக்கும்,மண்சோறு
சாப்பிடும்,
ஒப்பாரி ஓலமிடும்
நாணயமானவர்கள் ..
எதிர்ப்பதும்,மாறுபடுவதும்
மட்டும் முரணல்ல-நகைப்பதும்,
நாணயம்
இல்லாதவனை
நா-நிலம் நகைத்து
உரைப்பதும்
முரணே... நகை முரணே
உணர்வுடன்
விஜய் ஆனந்த் .S