பேசிய மொழிக்கு நித்திரை
பேசா சொல்லுக்கு மாத்திரை
-மௌனம்;
காரண காரியம் ஆயிரம் இருப்பின்
கனவுகளின் கண்ணீர் துளிகள்
–மௌனம்
காலத்தின் ஞானம்
கவிதையின் மூலம்
ஆத்மாவின் ஆருயிர் - மௌனம்
ம்
கன்னியின் மௌனம் கனவு தொலைக்கும்;
கவிஞனின் மௌனம் கவிதை சுரக்கும்;
முதியவரின் மௌனம் காலத்தே
உரைக்கும்;
ஆட்சியாளரின் கள்ள மௌனம்
கலகம் பிறக்கும்;
ஊடகத்தின் மௌனம் பொய்யை
உருவாக்கும்;
இல்ல துணையின் மௌனம் மனை
சிறக்கும்;
மண்ணின் மௌனம் புவி தட்டை
புன்னகைக்கும்;
மௌனிக்கும் முனிவன் முற்றும்
துறப்பான்
காலத்தே மௌனிக்கும் மாந்தன்
-தன்
கனவுகளை கருவாய் தரித்து
தளிரை உருமாற்றும் தருவாய்........
உணர்வுடன்
விஜய் ஆனந்த் .S
-->