ஏகாதிபத்தியம் முதல் ஏழையரசு வரை
தொட துணிந்த உயிரி;
மாவட்ட எல்லை,
மாநில எல்லை,
நாடுகளின் எல்லை,
கண்டங்களின் எல்லை கடந்த உயிரி ;
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று
நால்வர்ண ஆலாதித்தவரை
ஒதுங்க வைத்த உயிரி ;
கருப்பு வெள்ளை
என பேதபடுத்தியவரை
பதுங்க வைத்த உயிரி ;
மதம் பேசி
மானிடரை பிளவு படுத்தியவனை
மயானம் எண்ணி
அச்சம் கொள்ள வைத்த உயிரி ;
முப்பாலில் ஒன்றான
தன்பால் தான் உயர்ந்தது
என்று எண்ணியவனை
தனிமை படுத்திய உயிரி;
ஆத்திகவாதி முதல் நாத்திகவாதி வரை
வியாதி நினைத்து
விலக வைத்த உயிரி;
ஒலிம்பிக்கில்
உச்சம் தொடுபவனை
தொற்றில் உச்சம்
தொட வைத்த உயிரி ;
இது நிறைவடைய,
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை ,
தீதும் நன்றும் பிறர் தர வாரா ,
சுத்தம் அண்டம் காக்கும் ,
என்று எண்ணி
நேனோ உயிரி உலகத்துக்கு
கொடுத்த
அச்சம் தற்காலிகம் ;
உணர்த்திய
சமத்துவம் நிரந்தரம் ;
விஞ்ஞான உலகில்
மெய் பொருள் அறிந்து -விலாசம் பெறுவோம் ;
Bio War யை Bio Epic யாக மாற்றுவோம்;
விகாரி நிறைவுற்று சார்வாரியில்
சூழல் காத்து
கிருமியில்லா உலகம் செய்வோம்
கடவுளை நினைத்து இயற்கையை போற்றி …
உணர்வுடன்,
விஜய் ஆனந்த்