சிதறல்கள்

Thursday, December 30, 2010

2011











மண்ணில் பிறக்கும் மனிதரில்

மகுடம் தரிக்கும்

மனிதர் சிலரே !

அதில் முதலிடம் பெற சூளுரைப்போம் !!


உள்ளத்தால் உயர்ந்து

கயமையை வென்று

காலம் போற்றும் புனித இதழ்

தொடங்குவோம் 2011ல் !


ஆசையை துறந்தவன் புத்தன்

அடுத்தவர் உள்ள ஆசையை

அறிந்து

அன்பால் அருளி

புத்தனுக்கும் மூத்தவன் ஆவீர் !!


புவி வெப்பமானால் பூலோக

தட்ப வெட்பம் மாறும் ;

காலத்தே நாம் உறுதி பூண்டால்

பனிமலையா

வரும் கலகமும்

நம் காலடியில் மண்டியிடும்

அக்தே

தொடங்கும் நாள் இந்த புத்தாண்டு !!


இன்று பிறக்கும் புத்தாண்டு

இனிது ! இனிது !! இனிது !!!


இதனால் நமக்கு 2011

புதிது ! புதிது !! புதிது !!!


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

சொல்வோம் ;

இனிதே 2011 தொடங்குவோம்...


வாழ்த்துகளுடன்

விஜய் ஆனந்த் S

Thursday, December 16, 2010

இசை ப்ரியா














இன்னிசை பாடி இளைய நிலா

காணும் வயதில் ;

மண்ணின் விடுதலைக்காக -மரித்த

மானமிகு மஞ்சள் புறாவே !


நானிலம் போற்றும் நாயகன் - பிரபாகரனின்

இதய ஆசைகள் உதயமாக ;

இனிதே உன் செவ்வாயால் - சுதந்திர தாகத்தை

உலகுக்கு உரைக்கும் வீர வேந்தே !


புறநானுற்று தமிழச்சி கூறும் - நல்லுலகத்தை

இந்நூற்றாண்டில் நிறைவேற்றிய

என் இனிய தமிழச்சியே !


இசையான உன் புறமேனியை - ஊர்

பார்க்க வைத்த வீணர்களின் -ஆன்மாக்கள்

மரம் தேடி அலையும் காலமும் வரும்,

நேரமும் நெருங்கும் ?


இன்பம் மட்டுமே விரும்பும்

இன்றைய நவீன மகளிர் - ஊடே

தன் இன்னுயிர் நீத்த

21 ம் நூற்றாண்டின் வேலு நாச்சியாரே !


நீ மாண்டாலும் உன் ஆன்மா

உரக்க சொல்லும் ஈழத்தின் அவலத்தை !

ராஜபக்ஷே போன்ற வல்லுறுகளுக்கு -

காலம் நெருங்கும் வேளை ;


ஈழ தமிழ் தேசிய கீதத்தை தடை- செய்த

சண்டாளனுக்கு

லண்டனில் விழுந்தது அடிகளின் ஆரம்பம் ;

இனியும் இக்கதை தொடர்ந்தால் - ஓநாய்களுக்கு

விழும் அடி எழும் தமிழீழம் !


என்பதை உரைக்கும் தமிழ் நெஞ்சம் ,

அதனை உருவாக்கும் உன் தியாகம் i


உணர்வுடன்

விஜய் ஆனந்த் S

Tuesday, July 13, 2010

மழலைச்செல்வம்



இனிது இனிது மழலை - இனிது

அதனினும் இனிது - மழலைச்சொல் ;


அரிது அரிது குழந்தைப்பேறு - அரிது

அதனினும் அரிது - நற்குழந்தைப்பேறு;


புதிது புதிது புன்னகை - புதிது

அதனினும் புதிது -குழந்தையின் புன்னகை ;


எளிது எளிது எண்ணி நகையாடல் -எளிது

அதனினும் எளிது - மக்கட்நகை ;


கனிது கனிது உள்ளம் - கனிது

அதனினும் கனிது - தாயுள்ளம் ;


பொழிது பொழிது வானம் - பொழிது

அதனினும் பொழிது - தாய்மை ;


கவிது கவிது மலர் கண்கள் -கவிது

அதனினும் கவிது - தாய் இன்முகம் ;


என்னுயிர் செல்வமே,

யாம்கேட்ட மொழிகளிலே இனிய மொழி

உன் மொழி அதுதான் - மழலை மொழி;


யாம்கேட்ட சொற்களிலே இனிய சொல்

உன் சொல் அதுதான் - மழலைச்சொல் ;


அதுவே மயக்கும் சொல்.

மயக்கும் சொல் கேட்பீர்

மங்கும் மற்றதை மறப்பீர்.


பெருமையுடன்,

விஜய் ஆனந்த் S

Friday, June 18, 2010

தன்னம்பிக்கை

(பிறரை)நம்பி வாழ்வது வாழ்க்கை - அல்ல

(தன்)நம்பிக்கையாக வாழ்வதே வாழ்க்கை ...

உன்னால் முடியும்

உனக்குள் இருக்கும் உன்னை - அறிந்தால்

உன்னால் முடியும்

உன்னால் மட்டுமே முடியும் !?

நம்மொழி - செம்மொழி - தமிழ் மொழி!


வாழ்க தமிழ்!
வளர்க தமிழர்!


அகத்தை அன்போடும்;

புறத்தை புன்னகையோடும்;

கொடுத்த மொழி!

அதுவே நம்மொழி - செம்மொழி - தமிழ் மொழி!


அறிவியலின் அடிநாதம்;

ஆன்மிகத்தின் உயிர்நாதம்;

அரசியலின் அரிச்சுவடி;

இலக்கியத்தின் இன்பம்;

அருளிய மொழி!

அதுவே நம்மொழி - செம்மொழி - தமிழ் மொழி!


ஐம்பெரும்காப்பியமும் ,வான்புகழ் வள்ளுவமும்;

எட்டு தொகை நூல்களும்;

எண்ணில்லா சிந்தனை சிற்பிகளையும்;

கொடையாய் இவ்வுலகுக்கு அளித்த மொழி!

அதுவே நம்மொழி - செம்மொழி - தமிழ் மொழி!


கல் தோன்றிய காலத்துக்கு முன்னே - தோன்றிய

ஒப்பில்லாமொழி !

இலக்கண, இலக்கியம் ஒருங்கே அமைந்த மொழி!

அதுவே நம்மொழி - செம்மொழி - தமிழ் மொழி!


உணர்வுடன் ,

விஜய் ஆனந்த் S

Wednesday, May 12, 2010

பார்வதி அம்மாள்








பார் வியக்கும் மைந்தனை ஈன்ற -உன்னை

நிலம் இறக்க மறுத்த கயவாளிகளை உலகறியும் ;


அந்தோ தமிழா!

என்ன பாவம் செய்தாள் இந்த அன்னை ?

தமிழனை தன்மானத்தோடு தன் -நிலத்தில்

வாழ முயற்சித்த போராளியை ;


தமிழன் தலை நிமிர செய்ய - தன்

வாழ்வு இழந்த தனயனை;


உலகுக்கு அளித்தது குற்றமா?

வேற என்ன குற்றம் சொல்லும் -இந்த

கயமை படைத்த உள்ளங்கள் ???


எண்பது அகவையில்- உனை

வானில் அலைக்களித்த ஈனர்களுக்கு

காலம் பதில் சொல்லும் நாள் எந்நாளோ ?

அந்நாள் கனவுகள் மெய்படும்.


இந்த கயவர்கள் கழுவில் ஏற்றப்படுவார்கள்

சரித்திரத்தின் பக்கங்களாய் ???


உணர்வுடன் ,

விஜய் ஆனந்த் S

Monday, May 10, 2010

தாய்மை


நீரின்றி அமையா உலகு ;

தாய்மை இன்றி அமையா மானுடம்.

ஈழம்- எதிர்காலம்


என் இனிய மனித நேய மகாத்மாகளே ,

மே 18 இந்த அண்டத்தின் கருப்பு நாள் ;

ராஜபக்ஷேகளின் எழுச்சி நாள் ;


எதிர் கால ஈழத்தின் எழுச்சிக்கு - உதவிட

முன் வாருங்கள் உலக மனித நேயர்களே ;

ஆண்ட இனத்தை கருவறுக்கும் எதிரிகளை- காண்பீர்

அவர் தம் கனவுகளை கருவறுப்பிர்;


மனித இனத்தின் மகத்தான மாசுகளின் எண்ணங்களை புதைப்போம் ;

காந்தி மகானின் மானுட அமைதி தத்துவத்தை நிலை நாட்டுவோம் .


ஈழ போர் குற்றங்களை உலகறியும் ,

மறைப்பு நாடகத்தை நாநிலம் அறியும் ;

உதட்டளவில் உண்மையை உரக்க பேசும்

அகில உலக அமைதி புறாக்களே!


தாய் மண்ணின் மணத்தை சுவாசிக்க-

விரும்பும் மண்ணின் மைந்தனை;

ஈழத்தின் இறுதி தமிழ் மூச்சு -இனி ஒரு முறை

மண்ணில் உலா வர ஆக்சிஜென் கொடுப்பீர்;


கோயபெல்சுகளின் பொய் நாதத்தை முறியடிப்பீர்;

தந்தை செல்வாவின் ஈழ தேசத்தை ,காந்தி தேசமாக- மாற்ற

உலக அமைதி புறாக்களே ஒன்றிணைவீர்;


தனி ஈழம் அமைய / தன்னாட்சி தமிழ் மாநிலம் அமைய -

உலக மனித குல மகாத்மாகளே உரிமை குரல் எழுப்புவீர்

ஈழத்தின் அடுத்த தலை முறை ஆன்மாக்களுக்கு - அகல் விளக்காவீர்.


நன்றியுடன் ,

விஜய் ஆனந்த் S

கடவுள்

உன்னால் முடியும் எல்லாம் ;

எல்லாம் முடியும் அவனால் (ஆண்டவனால்) .

வாழ்க்கை

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே..

நிம்மதியாக வாழ முயற்சி செய்.

உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

வார்த்தை

நீ பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும்.

ஆனால்,

நீ பேசாத மெளனம் உன்னை நேசிப்பவற்களுக்கு மட்டுமே புரியும்...