சிதறல்கள்

Thursday, December 30, 2010

2011











மண்ணில் பிறக்கும் மனிதரில்

மகுடம் தரிக்கும்

மனிதர் சிலரே !

அதில் முதலிடம் பெற சூளுரைப்போம் !!


உள்ளத்தால் உயர்ந்து

கயமையை வென்று

காலம் போற்றும் புனித இதழ்

தொடங்குவோம் 2011ல் !


ஆசையை துறந்தவன் புத்தன்

அடுத்தவர் உள்ள ஆசையை

அறிந்து

அன்பால் அருளி

புத்தனுக்கும் மூத்தவன் ஆவீர் !!


புவி வெப்பமானால் பூலோக

தட்ப வெட்பம் மாறும் ;

காலத்தே நாம் உறுதி பூண்டால்

பனிமலையா

வரும் கலகமும்

நம் காலடியில் மண்டியிடும்

அக்தே

தொடங்கும் நாள் இந்த புத்தாண்டு !!


இன்று பிறக்கும் புத்தாண்டு

இனிது ! இனிது !! இனிது !!!


இதனால் நமக்கு 2011

புதிது ! புதிது !! புதிது !!!


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

சொல்வோம் ;

இனிதே 2011 தொடங்குவோம்...


வாழ்த்துகளுடன்

விஜய் ஆனந்த் S

4 comments:

  1. kalakkurada machan.....Happy New Year Da...

    ReplyDelete
  2. புவி வெப்பமானால் பூலோக
    தட்ப வெட்பம் மாறும் ;
    காலத்தே நாம் உறுதி பூண்டால்
    பனிமலையா
    வரும் கலகமும்
    நம் காலடியில் மண்டியிடும்
    அக்தே
    தொடங்கும் நாள் இந்த புத்தாண்டு !!

    கவிதை மிகவும் அருமை. பனிமலை அதுவாகவே உருகிவிடும் எனவே எரிமலை என்று இருந்திருந்தால் மிகவும் சரியாக இருந்திருக்கும் என்பது என்னுடைய கருத்து!

    நல்ல தமிழ் கவிதைக்கு "இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2011" என இருந்திருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்!

    ReplyDelete
  3. ஊக்கம் தரும் வரிகளுடன்... இனிய புத்தாண்டு வரவேற்பு... அருமை....

    தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete