சிதறல்கள்

Tuesday, July 29, 2014

நினைவின் கீறல்....



நிலையில்லா உலகில்
நினைவு போற்ற ஈட்ட -விழை
நினைவுகளே -நல்நினைவுகளே சம்பாத்தனை ...

பேறு முடிந்து பூவுலகில் அடி தொழ - வழி
ஈன்றோரே பேறு அவன் தம் இறைபேறு ....



கால் சட்டை வயதில்
கால் நூற்றாண்டு முன்- கனவுகளே
நாளைய கனவுகளே
அவன் தம் நல்வழி முன்னோடி ...

காளை பருவத்தில் 
கருமத்தை எண்ணா - மனதை 
உருமாற்றும் நல் நட்பே
கைமாறு அறியா காலக்கண்ணாடி...

முதிர்வு எட்ட நேரும் காலந்தனில்
முயற்சி ஒன்றே முடிவை தரும் தளிர் ...


ஒன்று இரண்டாய் இணை நேரத்தில்
கணையாய் மாறும்- கணையாழி
அவன்தம் இணையாளி...

ஏற்றத்தில் இறக்கம் தரும் இறையை
போற்ற விளையும் மனமே
அவன்தம் பூர்வ புண்ணியம்...


கால மாற்றத்தில்
கணினி யுகத்தில்
கண்ணிமைக்கும் கணத்தில்
கடனாய் வரும் நினைவுகளே
தருவாய் மாறும் முன்னேற்றங்களே
உருவாய் உயிர்பெரும் உளியின் ஓசை,
நெஞ்சத்தின் நினைவின் கீறல் .. 

நித்திரையில் வந்து
முத்திரையாய் முற்று பெரும் -நினைவுகளே
நினைவில் நில்லும் -நினைவின் கீறல்கள்
காலதேவனின் கற்பனை வாயில்கள் ...



உணர்வுடன்   
விஜய் ஆனந்த் .S
-->