சிதறல்கள்

Saturday, October 4, 2014

நகைமுரண்



பருவத்தே பயிர் செய்ய சொல்லும்
பி .டி விதை விற்கும் மரண வியாபாரி…

கடவுளை நம்பினார் கைவிடபடார்
என எண்ணிய கோயிலுக்குள்
ஆண்டவன் விக்ரகம் பூட்டிய அறைக்குள்…

வஞ்சகம் பேசேல் எனும்
நயமாக பேசும் நாக்கு வியாபாரிகள்…




      கடமையே கண்ணா இரு எனும்
ஊரார்
உடைமையில் உயிர் வளர்க்கும்
அதிகார ஒட்டுண்ணிகள்…

ஞயம்பட உரைக்க கூறும்
110 விதியை நியாயம் இல்லாமல்
அறுவடை செய்யும் ஆட்சியாளர்கள்…









ஊரில் பாந்தமாக பேசும்
உறவினிடே 
ஊறு விளைக்கும் ஊழ்வினை..




அழுகாச்சி மந்திரி சபையில்
வாய்தா கேட்டு
பின்னால் செல்லும் மாண்புமிகு…


காசேதான் கடவுளடா-சில 
மருத்துவனுக்கு
மனித உயிரே காசுதானடா..
.
Time to lead வாசகத்தை கூட
பிரசுரிக்க வலிமை இல்லாத நாளைய தமிழகம்..

3 லட்சம் தமிழன் மூச்சடைத்து
முள்ளிவாய்க்காலில்
முகாரி ஒலித்தபோது உணர்வில்லாதவன்
3 நாள் பிணை தாமதத்துக்கு
முடி இழக்கும்,மண்சோறு சாப்பிடும்,
ஒப்பாரி ஓலமிடும் நாணயமானவர்கள் ..




எதிர்ப்பதும்,மாறுபடுவதும்
மட்டும் முரணல்ல-நகைப்பதும்,
நாணயம் இல்லாதவனை
நா-நிலம் நகைத்து உரைப்பதும்
முரணே... நகை முரணே



உணர்வுடன்
   
விஜய் ஆனந்த் .S

Tuesday, July 29, 2014

நினைவின் கீறல்....



நிலையில்லா உலகில்
நினைவு போற்ற ஈட்ட -விழை
நினைவுகளே -நல்நினைவுகளே சம்பாத்தனை ...

பேறு முடிந்து பூவுலகில் அடி தொழ - வழி
ஈன்றோரே பேறு அவன் தம் இறைபேறு ....



கால் சட்டை வயதில்
கால் நூற்றாண்டு முன்- கனவுகளே
நாளைய கனவுகளே
அவன் தம் நல்வழி முன்னோடி ...

காளை பருவத்தில் 
கருமத்தை எண்ணா - மனதை 
உருமாற்றும் நல் நட்பே
கைமாறு அறியா காலக்கண்ணாடி...

முதிர்வு எட்ட நேரும் காலந்தனில்
முயற்சி ஒன்றே முடிவை தரும் தளிர் ...


ஒன்று இரண்டாய் இணை நேரத்தில்
கணையாய் மாறும்- கணையாழி
அவன்தம் இணையாளி...

ஏற்றத்தில் இறக்கம் தரும் இறையை
போற்ற விளையும் மனமே
அவன்தம் பூர்வ புண்ணியம்...


கால மாற்றத்தில்
கணினி யுகத்தில்
கண்ணிமைக்கும் கணத்தில்
கடனாய் வரும் நினைவுகளே
தருவாய் மாறும் முன்னேற்றங்களே
உருவாய் உயிர்பெரும் உளியின் ஓசை,
நெஞ்சத்தின் நினைவின் கீறல் .. 

நித்திரையில் வந்து
முத்திரையாய் முற்று பெரும் -நினைவுகளே
நினைவில் நில்லும் -நினைவின் கீறல்கள்
காலதேவனின் கற்பனை வாயில்கள் ...



உணர்வுடன்   
விஜய் ஆனந்த் .S
-->

Friday, May 23, 2014

விந்தை



நயக்கும் நிலம் தனில் -நாணய
நா-தனை உளோரும் -விந்தை!

நாக்கு வியாபாரிகள் நடமாடும் 
புவிதனில் 
வஞ்சகமிலா பெரியோர் -வியப்பு!


இருப்பை உணரா தருவில் பிறப்பை

உணர துடிக்கும் விருட்சம்
பூவுலகின்
முற்றில்லா ஆ...ச்சர்யம்...

கயமை மனத்திடே உருபெற்ற
கருதனை இதய மாற்றும்
மனமே 
மண்ணின் மகத்துவம்...

சிகரம் தடுத்து சிந்தனை மறுதலித்து
மனித மாண்பற்ற செயலை செயலிழக்க
செய்யும் செல்வரே
மானுட மாணிக்கம்...

விந்தைக்கு விந்தை சேர்க்கும்
மானுட மந்தையில்
மலடில்லா மண்ணை உருபெற உதவும்
யாவரும் அடடே ஆச்சயரியங்களே !!!!

ஆம்,

விதியும் நல்-மதியும் கலந்தால்
நாள்தோறும் தவணையில்
தவறில்லா ஆச்சயரியங்களே !!!!



உணர்வுடன்   

விஜய் ஆனந்த் .S



-->