சிதறல்கள்

Sunday, June 17, 2018

தகவமைவு


மலரில் உட்கார்ந்த வண்டு கேட்டது
உன்னால் பறக்கமுடியுமா என்று..

அதற்கு மலர் சொன்னது
என்னை வெட்டி விடு செடியிலிருந்து
பறந்து பூமியில் விழுவேன் என்று..

மீண்டும் மலரிடம் வண்டு கேட்டது
தொடர்ச்சியாக பறக்க முடியுமா என்று..

மலர் சொன்னது
நான் நீயாக மாறினால்
தற்காலிமாக பறந்து
விழத்தானே முடியும்..

இயற்கை அன்னை சிரித்தே சொன்னாள்
தேவையில்லா மாற்று வாழ அல்ல வீழ மட்டுமே....

விஜய் ஆனந்த் 
-->

No comments:

Post a Comment