சிதறல்கள்

Friday, April 10, 2020

சுற்றமும் சுழலும்



வானம் பார்த்து
பறக்க ஆசைப்பட்டோம் –பறந்தோம் ;
சிந்தனையும் இல்லாமல் ,சிறகுகள் இல்லாமல்
வளிமண்டலத்தின்
ஓசான் படலத்தை கிழித்து` …

நிலம் பார்த்து
நிற்க ஆசைப்பட்டோம் - நின்றோம் ;
நினைவுகள் இல்லாமல் ,நிம்மதியும் இல்லாமல்
விவசாய நிலம் அழித்து
மா-கட்டடம் எழுப்பி…

நீர் பார்த்து
மிதக்க ஆசைப்பட்டோம்-மிதந்தோம்;
நீச்சலும் தெரியாமல், பதட்டமும் அறியாமல்
அணு கழிவுகளை
கொட்டும் கலமாக்கி…

நெருப்பை பார்த்து
புகைக்க ஆசைப்பட்டோம்-புகைத்தோம்;
புதியன எண்ணாமல், பழையன கழிக்காமல்
எண்ணிலடங்கா நாட்களாய்
எரியும் நீரக கரிமமாக்கி ….

காற்றை பார்த்து
உலகம்
விரிவடைய ஆசைப்பட்டோம் -விரிந்தோம்
விந்தைகள் அறியாமல், விஷயம் புரியாமல்
பசுமை வளியை அழித்து
புவியை வெப்பமாக்கி …

Thursday, April 2, 2020

பரிவர்த்தனை



விலாசம் தேடி
வீதியில் அலைந்த
சிவப்பு விளக்கு மங்கை நோக்கி
நோக்கினான் அயல் தேசத்து அயலான்
பரிமாற்றம் நடந்தது
பரிவர்த்தனை முடிந்தது
HIVயும் கொரானாவும்
எது முந்தும் எது முடியும்
ஈஸாவுக்கும் தெரியுமா!!!
இன்ஸாவுக்கும் அறியுமா!!!
முடிவு செயலுக்கு தானே ??/….
மாறா மதம் எதற்கு மனிதம் போற்றும் நல்நடத்தை போதுமே….


தேடலுடன்,

விஜய் ஆனந்த்


Friday, March 27, 2020

உயிர்கொல்லியின் சமத்துவம்...



ஏகாதிபத்தியம் முதல் ஏழையரசு வரை
தொட துணிந்த உயிரி;

மாவட்ட எல்லை,
மாநில எல்லை,
நாடுகளின் எல்லை,
கண்டங்களின் எல்லை கடந்த உயிரி ;

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று
நால்வர்ண ஆலாதித்தவரை
ஒதுங்க வைத்த உயிரி ;

கருப்பு வெள்ளை 
என பேதபடுத்தியவரை
பதுங்க வைத்த உயிரி ;

மதம் பேசி 
மானிடரை பிளவு படுத்தியவனை
மயானம் எண்ணி 
அச்சம் கொள்ள வைத்த உயிரி ;

முப்பாலில் ஒன்றான
தன்பால் தான் உயர்ந்தது 
என்று எண்ணியவனை
தனிமை படுத்திய உயிரி;

ஆத்திகவாதி முதல் நாத்திகவாதி வரை
வியாதி நினைத்து 
விலக வைத்த உயிரி;

ஒலிம்பிக்கில் 
உச்சம் தொடுபவனை
தொற்றில் உச்சம் 
தொட வைத்த உயிரி ;

இது நிறைவடைய,

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை ,
தீதும் நன்றும் பிறர் தர வாரா ,
சுத்தம் அண்டம் காக்கும் ,
என்று எண்ணி

நேனோ உயிரி உலகத்துக்கு
கொடுத்த
அச்சம்  தற்காலிகம் ;
உணர்த்திய
சமத்துவம் நிரந்தரம் ;


விஞ்ஞான உலகில்  
மெய் பொருள் அறிந்து -விலாசம் பெறுவோம் ;
Bio War யை Bio Epic யாக மாற்றுவோம்;
விகாரி நிறைவுற்று சார்வாரியில்
சூழல் காத்து 
கிருமியில்லா உலகம் செய்வோம்
கடவுளை நினைத்து இயற்கையை போற்றி …


உணர்வுடன்,

விஜய் ஆனந்த்