சிதறல்கள்

Friday, June 18, 2010

நம்மொழி - செம்மொழி - தமிழ் மொழி!


வாழ்க தமிழ்!
வளர்க தமிழர்!


அகத்தை அன்போடும்;

புறத்தை புன்னகையோடும்;

கொடுத்த மொழி!

அதுவே நம்மொழி - செம்மொழி - தமிழ் மொழி!


அறிவியலின் அடிநாதம்;

ஆன்மிகத்தின் உயிர்நாதம்;

அரசியலின் அரிச்சுவடி;

இலக்கியத்தின் இன்பம்;

அருளிய மொழி!

அதுவே நம்மொழி - செம்மொழி - தமிழ் மொழி!


ஐம்பெரும்காப்பியமும் ,வான்புகழ் வள்ளுவமும்;

எட்டு தொகை நூல்களும்;

எண்ணில்லா சிந்தனை சிற்பிகளையும்;

கொடையாய் இவ்வுலகுக்கு அளித்த மொழி!

அதுவே நம்மொழி - செம்மொழி - தமிழ் மொழி!


கல் தோன்றிய காலத்துக்கு முன்னே - தோன்றிய

ஒப்பில்லாமொழி !

இலக்கண, இலக்கியம் ஒருங்கே அமைந்த மொழி!

அதுவே நம்மொழி - செம்மொழி - தமிழ் மொழி!


உணர்வுடன் ,

விஜய் ஆனந்த் S

1 comment:

  1. எமது தாய் மொழியான தமிழ் மொழிக்கு அழகு சேர்த்த
    கவிதை வரிகளுக்குப் பாராட்டுக்கள் சகோதரரே .
    தொடர்ந்தும் முயற்சியுங்கள் எதிர்காலத்தில் உங்கள்
    முயற்சிகள் யாவும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் .
    மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete