சிதறல்கள்

Wednesday, May 12, 2010

பார்வதி அம்மாள்








பார் வியக்கும் மைந்தனை ஈன்ற -உன்னை

நிலம் இறக்க மறுத்த கயவாளிகளை உலகறியும் ;


அந்தோ தமிழா!

என்ன பாவம் செய்தாள் இந்த அன்னை ?

தமிழனை தன்மானத்தோடு தன் -நிலத்தில்

வாழ முயற்சித்த போராளியை ;


தமிழன் தலை நிமிர செய்ய - தன்

வாழ்வு இழந்த தனயனை;


உலகுக்கு அளித்தது குற்றமா?

வேற என்ன குற்றம் சொல்லும் -இந்த

கயமை படைத்த உள்ளங்கள் ???


எண்பது அகவையில்- உனை

வானில் அலைக்களித்த ஈனர்களுக்கு

காலம் பதில் சொல்லும் நாள் எந்நாளோ ?

அந்நாள் கனவுகள் மெய்படும்.


இந்த கயவர்கள் கழுவில் ஏற்றப்படுவார்கள்

சரித்திரத்தின் பக்கங்களாய் ???


உணர்வுடன் ,

விஜய் ஆனந்த் S

Monday, May 10, 2010

தாய்மை


நீரின்றி அமையா உலகு ;

தாய்மை இன்றி அமையா மானுடம்.

ஈழம்- எதிர்காலம்


என் இனிய மனித நேய மகாத்மாகளே ,

மே 18 இந்த அண்டத்தின் கருப்பு நாள் ;

ராஜபக்ஷேகளின் எழுச்சி நாள் ;


எதிர் கால ஈழத்தின் எழுச்சிக்கு - உதவிட

முன் வாருங்கள் உலக மனித நேயர்களே ;

ஆண்ட இனத்தை கருவறுக்கும் எதிரிகளை- காண்பீர்

அவர் தம் கனவுகளை கருவறுப்பிர்;


மனித இனத்தின் மகத்தான மாசுகளின் எண்ணங்களை புதைப்போம் ;

காந்தி மகானின் மானுட அமைதி தத்துவத்தை நிலை நாட்டுவோம் .


ஈழ போர் குற்றங்களை உலகறியும் ,

மறைப்பு நாடகத்தை நாநிலம் அறியும் ;

உதட்டளவில் உண்மையை உரக்க பேசும்

அகில உலக அமைதி புறாக்களே!


தாய் மண்ணின் மணத்தை சுவாசிக்க-

விரும்பும் மண்ணின் மைந்தனை;

ஈழத்தின் இறுதி தமிழ் மூச்சு -இனி ஒரு முறை

மண்ணில் உலா வர ஆக்சிஜென் கொடுப்பீர்;


கோயபெல்சுகளின் பொய் நாதத்தை முறியடிப்பீர்;

தந்தை செல்வாவின் ஈழ தேசத்தை ,காந்தி தேசமாக- மாற்ற

உலக அமைதி புறாக்களே ஒன்றிணைவீர்;


தனி ஈழம் அமைய / தன்னாட்சி தமிழ் மாநிலம் அமைய -

உலக மனித குல மகாத்மாகளே உரிமை குரல் எழுப்புவீர்

ஈழத்தின் அடுத்த தலை முறை ஆன்மாக்களுக்கு - அகல் விளக்காவீர்.


நன்றியுடன் ,

விஜய் ஆனந்த் S

கடவுள்

உன்னால் முடியும் எல்லாம் ;

எல்லாம் முடியும் அவனால் (ஆண்டவனால்) .

வாழ்க்கை

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே..

நிம்மதியாக வாழ முயற்சி செய்.

உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

வார்த்தை

நீ பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும்.

ஆனால்,

நீ பேசாத மெளனம் உன்னை நேசிப்பவற்களுக்கு மட்டுமே புரியும்...