சிதறல்கள்

Monday, April 11, 2011

தேர்தல் -2011







Election-ல் தேறுகின்ற தலைகள் எல்லாம்

தறுதலைகள்ஆம் !

தருகின்ற தலைகள் .....


தருவாய் நோட்டு ஆயிரத்தில்

பெருவாய் ஒட்டு மக்களிடத்தில்

என்னே ஜனநாயகம் !!!


ஜனங்களுக்கு நாயகனாய் வருபவன்

பணத்துக்கு நாயகன் ?

பரிவாரத்துக்கு நாயகன் ?

ஆனால்.....

என் இனத்துக்கோ எதிரி !

வாழ்க ஜனநாயகம்....


பெருந்தலைவரும், அறிஞரும்

ஒட்டு கேட்ட ஊரில்

பொய்யர்களும், குடிகாரர்களும்

ஒட்டு வேட்டை ஆடுகின்றனர்....


புள்ளிவிவரத்தோடு ஒட்டு

கேட்ட காலம் மாறி ;

புள்ளி ராஜாக்கள் ஒட்டு கேட்கிறார்கள்

இது தான் கலி காலமோ ?


ஐயோ

என்ன பாவம் செய்தது என் தமிழ் ஜாதி


தமிழா !

ஆதி காலத்தில் உன் புகழ் பாடும் - இனம்

வெற்றிலைக்கு கோதுமை தந்தாய் - என்று

பண்ட மாற்றத்துக்காக ...


இன்றும் பழசை மறப்பவன் அல்ல- நீ?

நோட்டுக்கு ஒட்டு சீட்டை மாற்றுகிறாய் !

என்னே பரிவர்த்தகம்!!

என்னே பண்ட மாற்றம் !!


இதனால்

வாழ்வது நீதானோ ?

அல்ல அல்ல


கள்வர்கள் கவர்கிறார்கள் உன் - ஒட்டு சீட்டை

கயவர்கள் உருவுவார்கள் - விரைவில்

உன் வீட்டின் மேற்புற ஓட்டை...


உணர்வுடன்

விஜய் ஆனந்த் S