சிதறல்கள்

Friday, April 10, 2020

சுற்றமும் சுழலும்



வானம் பார்த்து
பறக்க ஆசைப்பட்டோம் –பறந்தோம் ;
சிந்தனையும் இல்லாமல் ,சிறகுகள் இல்லாமல்
வளிமண்டலத்தின்
ஓசான் படலத்தை கிழித்து` …

நிலம் பார்த்து
நிற்க ஆசைப்பட்டோம் - நின்றோம் ;
நினைவுகள் இல்லாமல் ,நிம்மதியும் இல்லாமல்
விவசாய நிலம் அழித்து
மா-கட்டடம் எழுப்பி…

நீர் பார்த்து
மிதக்க ஆசைப்பட்டோம்-மிதந்தோம்;
நீச்சலும் தெரியாமல், பதட்டமும் அறியாமல்
அணு கழிவுகளை
கொட்டும் கலமாக்கி…

நெருப்பை பார்த்து
புகைக்க ஆசைப்பட்டோம்-புகைத்தோம்;
புதியன எண்ணாமல், பழையன கழிக்காமல்
எண்ணிலடங்கா நாட்களாய்
எரியும் நீரக கரிமமாக்கி ….

காற்றை பார்த்து
உலகம்
விரிவடைய ஆசைப்பட்டோம் -விரிந்தோம்
விந்தைகள் அறியாமல், விஷயம் புரியாமல்
பசுமை வளியை அழித்து
புவியை வெப்பமாக்கி …


ஏ மனிதா,
பஞ்ச பூதங்களை பார்த்து
ஆசைப்பட்டாய்
அடையவும் செய்தாய் -அதில்
ஆசையான பேராசையில்
சுயத்தை இழந்தாய்
சுற்றுசூழலை காக்காமல்
சுயநலத்தைதானே  அடைந்தாய்
சந்ததியினர் சூழலை ஆச்சரியக்குறியாக்கி???!!!

உணர்வுடன்,


விஜய் ஆனந்த்

No comments:

Post a Comment