சிதறல்கள்

Monday, May 10, 2010

ஈழம்- எதிர்காலம்


என் இனிய மனித நேய மகாத்மாகளே ,

மே 18 இந்த அண்டத்தின் கருப்பு நாள் ;

ராஜபக்ஷேகளின் எழுச்சி நாள் ;


எதிர் கால ஈழத்தின் எழுச்சிக்கு - உதவிட

முன் வாருங்கள் உலக மனித நேயர்களே ;

ஆண்ட இனத்தை கருவறுக்கும் எதிரிகளை- காண்பீர்

அவர் தம் கனவுகளை கருவறுப்பிர்;


மனித இனத்தின் மகத்தான மாசுகளின் எண்ணங்களை புதைப்போம் ;

காந்தி மகானின் மானுட அமைதி தத்துவத்தை நிலை நாட்டுவோம் .


ஈழ போர் குற்றங்களை உலகறியும் ,

மறைப்பு நாடகத்தை நாநிலம் அறியும் ;

உதட்டளவில் உண்மையை உரக்க பேசும்

அகில உலக அமைதி புறாக்களே!


தாய் மண்ணின் மணத்தை சுவாசிக்க-

விரும்பும் மண்ணின் மைந்தனை;

ஈழத்தின் இறுதி தமிழ் மூச்சு -இனி ஒரு முறை

மண்ணில் உலா வர ஆக்சிஜென் கொடுப்பீர்;


கோயபெல்சுகளின் பொய் நாதத்தை முறியடிப்பீர்;

தந்தை செல்வாவின் ஈழ தேசத்தை ,காந்தி தேசமாக- மாற்ற

உலக அமைதி புறாக்களே ஒன்றிணைவீர்;


தனி ஈழம் அமைய / தன்னாட்சி தமிழ் மாநிலம் அமைய -

உலக மனித குல மகாத்மாகளே உரிமை குரல் எழுப்புவீர்

ஈழத்தின் அடுத்த தலை முறை ஆன்மாக்களுக்கு - அகல் விளக்காவீர்.


நன்றியுடன் ,

விஜய் ஆனந்த் S

No comments:

Post a Comment