என் இனிய மனித நேய மகாத்மாகளே ,
மே 18 இந்த அண்டத்தின் கருப்பு நாள் ;
ராஜபக்ஷேகளின் எழுச்சி நாள் ;
எதிர் கால ஈழத்தின் எழுச்சிக்கு - உதவிட
முன் வாருங்கள் உலக மனித நேயர்களே ;
ஆண்ட இனத்தை கருவறுக்கும் எதிரிகளை- காண்பீர்
அவர் தம் கனவுகளை கருவறுப்பிர்;
மனித இனத்தின் மகத்தான மாசுகளின் எண்ணங்களை புதைப்போம் ;
காந்தி மகானின் மானுட அமைதி தத்துவத்தை நிலை நாட்டுவோம் .
ஈழ போர் குற்றங்களை உலகறியும் ,
மறைப்பு நாடகத்தை நாநிலம் அறியும் ;
உதட்டளவில் உண்மையை உரக்க பேசும்
அகில உலக அமைதி புறாக்களே!
தாய் மண்ணின் மணத்தை சுவாசிக்க-
விரும்பும் மண்ணின் மைந்தனை;
ஈழத்தின் இறுதி தமிழ் மூச்சு -இனி ஒரு முறை
மண்ணில் உலா வர ஆக்சிஜென் கொடுப்பீர்;
கோயபெல்சுகளின் பொய் நாதத்தை முறியடிப்பீர்;
தந்தை செல்வாவின் ஈழ தேசத்தை ,காந்தி தேசமாக- மாற்ற
உலக அமைதி புறாக்களே ஒன்றிணைவீர்;
தனி ஈழம் அமைய / தன்னாட்சி தமிழ் மாநிலம் அமைய -
உலக மனித குல மகாத்மாகளே உரிமை குரல் எழுப்புவீர்
ஈழத்தின் அடுத்த தலை முறை ஆன்மாக்களுக்கு - அகல் விளக்காவீர்.
நன்றியுடன் ,
விஜய் ஆனந்த் S
No comments:
Post a Comment