சிதறல்கள்

Friday, May 23, 2014

விந்தை



நயக்கும் நிலம் தனில் -நாணய
நா-தனை உளோரும் -விந்தை!

நாக்கு வியாபாரிகள் நடமாடும் 
புவிதனில் 
வஞ்சகமிலா பெரியோர் -வியப்பு!


இருப்பை உணரா தருவில் பிறப்பை

உணர துடிக்கும் விருட்சம்
பூவுலகின்
முற்றில்லா ஆ...ச்சர்யம்...

கயமை மனத்திடே உருபெற்ற
கருதனை இதய மாற்றும்
மனமே 
மண்ணின் மகத்துவம்...

சிகரம் தடுத்து சிந்தனை மறுதலித்து
மனித மாண்பற்ற செயலை செயலிழக்க
செய்யும் செல்வரே
மானுட மாணிக்கம்...

விந்தைக்கு விந்தை சேர்க்கும்
மானுட மந்தையில்
மலடில்லா மண்ணை உருபெற உதவும்
யாவரும் அடடே ஆச்சயரியங்களே !!!!

ஆம்,

விதியும் நல்-மதியும் கலந்தால்
நாள்தோறும் தவணையில்
தவறில்லா ஆச்சயரியங்களே !!!!



உணர்வுடன்   

விஜய் ஆனந்த் .S



-->

No comments:

Post a Comment