சிதறல்கள்

Friday, July 15, 2011

காமராஜ் - நேர்மையின் மறைநூல்















வாழும்போதே

நேருவால் சிலை திறக்கப்பட்ட

கருப்பு காந்தியே!


சிவகாமி பெற்றெடுத்த சிகரம்

நீதானே...

சாஸ்திரியையும் கை காட்டினாய்!

இந்திராவையும் இமயம் ஏற்றினாய்!

இந்தியாவிற்கு தலைமை பொறுப்பேற்க...

ஆம்

உனை உலகம் சொல்லும்

KING MAKER என்று ... இல்லை

நான் சொல்கிறேன் நீ QUEEN MAKER யும் கூட...


சத்திய மூர்த்தி கண்டறிந்த

சத்தியமான கோஹினூர் வைரமே!


பெரியாரின் பேரன்பு;

அண்ணாவின் குலக்கொழுந்து;

ஜீவாவின் அரும் நண்பன்;

கலைஞரின் (கள்ள) காதலன்;

அகிலத்தின் நேர்மையின் மறுபிறப்பு -நீ தானே


அரிஜனை அறநிலைத்துறை அமைச்சராக்கி,

அரியணையில் ஏற்றி,

ஆச்சாரியர்களுக்கு ஆழ்நித்திரை வழங்கியவரே !


ஈஸ்வரன் உள்ள இடத்துக்கு

பரமேஸ்வரனை அனுப்பி

சமத்துவத்திக்கு வித்திட்டவரே!


கல்வி கற்றோர் ஆயிரம் பேர் அரியணையில்

அமர்ந்தாலும்--

பள்ளிக்கல்வி அறியா உலககல்வியின் பிதாமகன்

உன் உதிரத்தில் தான்

சுதந்திரத்தையும் வாங்கி தந்ததாய்!

ஜனநாயகத்தையும் அரியணை ஏற்றினாய்!

பண நாயகத்தையும் கருவறுத்தாய்


அதனால்தான்

பகுத்தறிவு பகலவனால்

பச்சை தமிழன் என போற்றப்பட்டாய்...


தமிழகத்தை ,

கல்லாதோர் எங்கும் இல்லாதோர்

உள்ள மாநிலமாக்க விதை விதைத்தாய் !

தொழில் புரட்சி தொடங்கும்

தொழுவம் ஆக்கினாய்!

குலகல்வியை காணாமற் செய்தாய்!

அனல் மின் நிலையம் உருவாக்கினாய்!

அணைகள் பல கட்டினாய்!

தொழில்பேட்டை பற்பல நாட்டினில் பாச்சினாய்!


எதிர்கால தலைமுறை எண்ணி

ஏராளம் செய்தாய் ...

அதனால் ஏளனம் செய்தவரும்

ஏணியாக உனையாக்கி ஏறுமுகம் கண்டனர்...


காலம் சென்றது

கடமை வென்றது

சத்தியம் நிலைத்தது உன் வடிவில்

இன்னும் ஒரு நூற்றாண்டு என்ன

அதற்கு மேலும் ஆனாலும்

இமயமும் சொல்லும்....

இந்தியாவின் எவரெஸ்ட் நீ என்றும்...

நேர்மையின் மறை நூல் உன் வரலாறு என்றும்...


கல்விகண்ணை திறந்த கண்ணியவான்

உனை காலன்

பற்றியபோதுதான்

நெருப்பே கேட்டது நான் ஏன் பிறந்தேன் என்று...


மரியாதையுடன்,

விஜய் ஆனந்த் .S


Sunday, May 8, 2011

அம்மாவுக்காக (அன்னையர் தினம் spl )










அம்மா

( - உயிர் ; ம் - மெய் ; மா -உயிர் மெய்)

உயிரும் மெய்யும் சேர்ந்து

உயிர் மெய்யாய் - மழலையினை

உருவாக்குவாய் - நீ !


குழவியாய் கருத்தரித்து ;

குழந்தையாய் ஈன்றெடுத்து ;

குமரனாய் வளர்த்தெடுத்து ;

குன்றேறி குபேரனாய்

வாழ வைப்பாய் ! நீ ! தாய் அல்லவோ !


உன் மடியில் உணவு - எனக்களிப்பாய்

உன் நிழலில் எனை - வளர்ப்பாய்

உன் மார்பில் போர்த்தி எனை - தூங்க வைப்பாய்

எனக்கு உணவு - உடை - இருப்பிடம்

நீதானே ! தாய் தானே !


ஆன்மிகம் ஆயிரம் சொன்னாலும்

அம்மா சொல் தானே வேதம் !!!


அறிவியியல் கோடி சொன்னாலும்

அன்னை சொல் தானே - ஈர்ப்பு தத்துவம்

ஆம்

மன ஈர்ப்பு தத்துவம்!!!


மறையும் தலைவர்கள் 100 செய்தாலும்

ஈன்ற அன்னையின் ஓர் செயலேமறை!!!


விளையாட்டாய் மகன் செய்யும்

ஒவ்வொரு செயலையும்

வியப்பில் பார்த்து வியாபிப்பாயே !


ஆண்டவன் அருளிய கதையில்

நீதி இருக்கும் ;

தாயே ,நீ சொல்லும்

கதையில்

என்னுள் நீதானேஇருப்பாய்.


அன்பால் நீ ஊட்டும்

ஓர் கவள சோற்றுக்கு

அகிலத்தையே கொடுத்தாலும் -இணையாகா


அம்மா உடல் மறைக்கும் துணியில்

ஒட்டு இருக்கும் ;

ஆசையாய் மைந்தன் அணியும் ஆடையில்

ஓட்டை இருக்கும் ?

fashion ஆக...


புத்தியற்று உள்ளவனுக்கு

போதி மரம் நீதானே !

நாதியற்று உள்ளவனுக்கு

நங்கூரம் பாய்சுபவன்

நீதானே ! பெற்ற தாய்தானே !!


துறவியும் துறக்க இயலா உறவல்லவா - நீ

ஆம்

ஆதி சங்கரனும்

பற்றற்ற பட்டினத்து அடிகளும்

துறவா உறவே தாய் உறவு !!!


துறவியே துறக்க இயலா உறவை துறந்தவன்

மனிதன் அல்ல - மலடன் ..

நாங்கள் மனிதர்களாய் இருக்கிறோம்

அன்னையினை தெய்வமாய்

நடமாடும் தெய்வமாய் - தொழுவோம் !!


கருப்பையின் இடது மூலையில்

நீ என்னை சுமந்ததால்

நீதானே

எனக்கு கன்னி மூல கணபதி ...


உணர்வுடன்

விஜய் ஆனந்த் S

Monday, April 11, 2011

தேர்தல் -2011







Election-ல் தேறுகின்ற தலைகள் எல்லாம்

தறுதலைகள்ஆம் !

தருகின்ற தலைகள் .....


தருவாய் நோட்டு ஆயிரத்தில்

பெருவாய் ஒட்டு மக்களிடத்தில்

என்னே ஜனநாயகம் !!!


ஜனங்களுக்கு நாயகனாய் வருபவன்

பணத்துக்கு நாயகன் ?

பரிவாரத்துக்கு நாயகன் ?

ஆனால்.....

என் இனத்துக்கோ எதிரி !

வாழ்க ஜனநாயகம்....


பெருந்தலைவரும், அறிஞரும்

ஒட்டு கேட்ட ஊரில்

பொய்யர்களும், குடிகாரர்களும்

ஒட்டு வேட்டை ஆடுகின்றனர்....


புள்ளிவிவரத்தோடு ஒட்டு

கேட்ட காலம் மாறி ;

புள்ளி ராஜாக்கள் ஒட்டு கேட்கிறார்கள்

இது தான் கலி காலமோ ?


ஐயோ

என்ன பாவம் செய்தது என் தமிழ் ஜாதி


தமிழா !

ஆதி காலத்தில் உன் புகழ் பாடும் - இனம்

வெற்றிலைக்கு கோதுமை தந்தாய் - என்று

பண்ட மாற்றத்துக்காக ...


இன்றும் பழசை மறப்பவன் அல்ல- நீ?

நோட்டுக்கு ஒட்டு சீட்டை மாற்றுகிறாய் !

என்னே பரிவர்த்தகம்!!

என்னே பண்ட மாற்றம் !!


இதனால்

வாழ்வது நீதானோ ?

அல்ல அல்ல


கள்வர்கள் கவர்கிறார்கள் உன் - ஒட்டு சீட்டை

கயவர்கள் உருவுவார்கள் - விரைவில்

உன் வீட்டின் மேற்புற ஓட்டை...


உணர்வுடன்

விஜய் ஆனந்த் S