சிதறல்கள்

Thursday, October 13, 2011

இயற்கை











தேடும் போது விழி முன் வரா தேவதை

தேநீர் அருந்தும் போது வீதியில் வருவாள்...


ஆயிரம் கண்கள் தேடினாலும் தெரியா

ஆண்டவன் ;

புறக்கண்ணை மூடினால் அகக்கண்ணில் தெரிவான்...


தேர்வு அறையில் புலப்படா விடை

பேருந்தில் வரும் போது தோன்றும்...


கோடி செலவிட்டு வெற்றி பெறா

அரசியல்வாதி;

கொடி மட்டும் கட்டும் போதே ஜெயிப்பான்...


Ctrl+F போட்டு கிடைக்கா solution யும் ;

F1 போட்டு கண்டறியா Source யும் ;

Keyboard யே தொடாத போது தோன்றும்...


நாள் முழுவதும் சண்டை போட்டு வரா முடிவு

4 நிமிட அமைதியில் கிடைக்கும்...


வாழ்க்கை என்பது எதிர் பார்ப்பது அல்ல

எதிர்ப்பை பார்ப்பது...

இதற்கு பெயர் முரண்பாடு அல்ல

இயற்கையின் வெளிபாடு....


நட்புடன்

விஜய் ஆனந்த் S

No comments:

Post a Comment