சிதறல்கள்

Friday, May 1, 2015

மௌனம்



பேசிய மொழிக்கு நித்திரை
பேசா சொல்லுக்கு மாத்திரை -மௌனம்;

காரண காரியம் ஆயிரம் இருப்பின்
கனவுகளின் கண்ணீர் துளிகள் –மௌனம்




காலத்தின் ஞானம்
கவிதையின் மூலம்
ஆத்மாவின் ஆருயிர் - மௌனம்



ம்

கன்னியின் மௌனம் கனவு தொலைக்கும்;
கவிஞனின் மௌனம் கவிதை சுரக்கும்;
முதியவரின் மௌனம் காலத்தே உரைக்கும்;

ஆட்சியாளரின் கள்ள மௌனம் கலகம் பிறக்கும்;
ஊடகத்தின் மௌனம் பொய்யை உருவாக்கும்;
இல்ல துணையின் மௌனம் மனை சிறக்கும்;
மண்ணின் மௌனம் புவி தட்டை புன்னகைக்கும்;




மௌனிக்கும் முனிவன் முற்றும் துறப்பான்
காலத்தே மௌனிக்கும் மாந்தன் -தன்
கனவுகளை கருவாய் தரித்து
தளிரை உருமாற்றும் தருவாய்........





உணர்வுடன்
  
விஜய் ஆனந்த் .S
-->

No comments:

Post a Comment