சிதறல்கள்

Wednesday, May 12, 2010

பார்வதி அம்மாள்








பார் வியக்கும் மைந்தனை ஈன்ற -உன்னை

நிலம் இறக்க மறுத்த கயவாளிகளை உலகறியும் ;


அந்தோ தமிழா!

என்ன பாவம் செய்தாள் இந்த அன்னை ?

தமிழனை தன்மானத்தோடு தன் -நிலத்தில்

வாழ முயற்சித்த போராளியை ;


தமிழன் தலை நிமிர செய்ய - தன்

வாழ்வு இழந்த தனயனை;


உலகுக்கு அளித்தது குற்றமா?

வேற என்ன குற்றம் சொல்லும் -இந்த

கயமை படைத்த உள்ளங்கள் ???


எண்பது அகவையில்- உனை

வானில் அலைக்களித்த ஈனர்களுக்கு

காலம் பதில் சொல்லும் நாள் எந்நாளோ ?

அந்நாள் கனவுகள் மெய்படும்.


இந்த கயவர்கள் கழுவில் ஏற்றப்படுவார்கள்

சரித்திரத்தின் பக்கங்களாய் ???


உணர்வுடன் ,

விஜய் ஆனந்த் S

4 comments: